நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 12 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 12, 2019

முக்கியமான நாட்கள்

ஜனவரி 12 – தேசிய இளைஞர் தினம்

  • சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜனவரி 12ஆம் தேதியான இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமாகும். இந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக 1984ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதனால் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் இந்த தினத்தில் இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • தேசிய இளைஞர் தின தீம் ‘Channelizing Youth Power for Nation Building‘.

தேசிய செய்திகள்

ஜம்மு & காஷ்மீர்

லடாக் பகுதியில் 4.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அனர்த்த முகாமைத்துவ காலை22 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.6 புள்ளிகளாக பதிவானது. லே பகுதியில் இருந்து 63.6 கிமீ, கார்கிலில் இருந்து 193.1 கிமீ தூரத்தில் மையமாக வைத்து இந்த நிலநடுக்கம் உருவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புது தில்லி

தேசிய இளைஞர் பாராளுமன்ற விழா 2019

  • 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய இளைஞர் பாராளுமன்ற விழாவை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கர்னல் ராஜவர்தன் ரத்தோர் (Retd) தொடங்கி வைத்தார்.புதிய இந்தியாவைப் பற்றி  திட்டங்கள் தீட்டி முன்னேற்ற வழிகளைக் கண்டுபிடிப்பது அந்தத் திட்டங்களை 2022க்குள் நிறைவேற்ற இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதாகும்.
  • தீம் “Be The Voice of New India” and “Find solutions and contribute to policy”.

சண்டிகர்

6 வது இந்திய பெண்கள் ஆர்கானிக் விழா

  • மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் சண்டிகரில் மூன்று நாள், 6 ஆவது இந்திய பெண்கள் ஆர்கானிக் விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் உள்ள ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபடும் பெண் விவசாயிகளையும் தொழில் முயற்சிகளையும் கொண்டாடுவதும், ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். 2015ம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் ஆர்கானிக் விழா ஆண்டுதோறும் புது தில்லியில் நடக்கிறது.

சர்வதேச செய்திகள்

துளசி கபார்ட் 2020 தேர்தலில் ஜனாதிபதி டிரம்பை எதிர்கொள்வதாக அறிவித்தார்

  • அமெரிக்க காங்கிரஸின் முதல் இந்து சட்டமன்ற உறுப்பினரான துளசி கபார்ட் 2020 ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் களம் இறங்குவதாக அறிவித்துள்ளார். செனட்டர் எலிசபெத் வாரனிற்கு பிறகு ஜனநாயகக் கட்சியில் இருந்து ஜனாதிபதி தேர்தல் போட்டியில் களமிறங்கும் இரண்டாவது பெண்மணி துளசி கபார்ட் ஆவார்.

கலிபோர்னிய கடல் சிங்கங்கள் புலம் பெயரும் மீன்களைப் பாதுகாப்பதற்காக கொல்லப்பட்டன

  • அழிந்துவரும் நிலையிலுள்ள சால்மோன் மீன்கள் மற்றும் ஸ்டீல்ஹெட் டிரவுட் ஆகியவற்றைப் பாதுகாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மாதத்தில் நான்கு கடல் சிங்கங்கள் கொல்லப்பட்டன.

அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் நீண்டகாலமாகப் பதிவு 

  • அமெரிக்க அரசாங்கத்தின் பகுதிநேர முடக்கம், அரசியல் நிலைப்பாட்டிற்கு இன்னும் முடிவில்லாமல், நீண்டகாலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த 1995-96ல் 21 நாள் அரசு முடங்கியதே அதிகபட்சமாக இருந்தது. டிரம்ப் அரசின் முடக்கம் 22வது நாளை எட்டி முந்தைய சாதனையை முறையடித்தது. 

அறிவியல் செய்திகள்

இஸ்ரோவின் ஜிசாட்-20

  • செப்டம்பர்-அக்டோபரில் உயர் அலைவரிசை இணைப்புக்கான ஜிசாட்-20 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. 2023ல் இஸ்ரோ வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய ஒரு திட்டிமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கூறினார். சந்திரயான் -2 திட்டத்தின் கீழ் முதல் முறையாக சந்திரனின் தென் துருவத்தை லேண்ட் ரோவர் மூலம் ஆய்வு செய்யும் என்று அவர் கூறினார்.

பிஎஸ்எல்விசி44 கூடுதல் அம்சங்களுடன் விண்ணில் ஏவப்பட உள்ளது

  • வரவிருக்கும் பிஎஸ்எல்வி -சி44 புதிய வேரியண்ட் பிஎஸ்எல்வி-யை பயன்படுத்தும். இந்த வேரியண்ட், பிஎஸ்எல்வி-டிஎல், அதிக உந்துதல் வழங்குவதற்காக இரண்டு ஸ்ட்ராப் ஆன்-பூஸ்டர்களை பயன்படுத்தும். 

வணிகம் & பொருளாதாரம்

சவரன் தங்க பத்திர திட்டம்

  • நேரடி தங்கம் வாங்குவதைக் குறைத்து பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் இறக்குமதிக்கு ஆகும் செலவுகளை குறைக்க அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே சவரன் தங்க பத்திரம் (Sovereign Gold Bond) ஆகும். இந்த சவரன் தங்க பத்திர திட்டத்தின் 2018-19 சீரிஸ் 5, ஜன.14 அன்று தொடங்கவுள்ளது. ஜனவரி 18 வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். கிராம் ஒன்றுக்கு 3,214 என்ற கணக்கில் பத்திரத்தின் பண மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைனில் அப்ளை செய்பவர்களுக்கும், டிஜிட்டல் மோடில் அப்ளை செய்பவர்களுக்கும் கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர்களுக்கு, கிராம் ஒன்றுக்கு ரூ.3,164 என விலை நிர்ணயிக்கப்படும்.

அசோக் சாவ்லா தேசிய பங்குச் சந்தையின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

  • அண்மையில் அமல்படுத்தப்பட்டு சட்டப்பூர்வ மேம்பாடுகளின் காரணமாக அசோக் சாவ்லா பதவி விலகியதாக தேசிய பங்குச் சந்தை அறிவிப்பு. 

மாநாடுகள்

வைப்ரன்ட் குஜராத் உச்சி மாநாடு

  • ஐந்து மாநிலத்தின் முதல்வர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட இராஜதந்திரிகள் மற்றும் நாட்டின் தொழில்துறையின் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 18 ம் தேதி வைப்ரன்ட் குஜராத் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டின் 9 வது பதிப்பைத் தொடங்கி வைப்பார்.

விருதுகள்

ஜெனரல் பூர்ணா சந்திர தபாவுக்கு இந்திய இராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவி

  • ஜனவரி 12ம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் ஒரு சிறப்புத் திட்டமிடல் நிகழ்வில் நேபாளத்தின் நீண்ட கால வளர்ச்சி மற்றும் இந்தியாவுடன் நட்புறவு கொண்டிருத்தல் போன்ற அவரது பாராட்டத்தக்க இராணுவ வலிமை மற்றும் கணிசமான பங்களிப்புக்காக இந்திய ஜனாதிபதி, ஸ்ரீ ராம் நாத் கோவிந்த், நேபாள இராணுவத்தின் தலைமை தளபதி சுகீர்த்திமயா ராஷ்ட்ரதீப் ஜெனரல் பூர்ணா சந்திர தபாவுக்கு இந்திய இராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விளையாட்டு செய்திகள்

எம் எஸ் தோனி ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்கள் அடித்து சாதனை

  • இந்தியாவின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான எம் எஸ் தோனி ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
  • சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது இந்திய வீரர் தோனி ஆவார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!