நடப்பு நிகழ்வுகள் – 10 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 10 மே 2023
நடப்பு நிகழ்வுகள் – 10 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 10 மே 2023

தேசிய செய்திகள்

இந்திய தபால் துறையானது  CAIT மற்றும் டிரிப்டா டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களிடம் தளவாட சேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

  • இந்தியா தபால்துறையானது அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) மற்றும் டிரிப்டா டெக்னாலஜிஸ் ஆகியவற்றுடன் தபால்துறையை விரிவுபடுத்த மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு பயனளிக்கும் என்பதால், அவர்கள் நாடு முழுவதும் இந்தியா தபால்துறையை ஒரு தளவாட சேவை வழங்குநராகப் பயன்படுத்த முடியும். சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு காமர்ஸை எடுத்துச் செல்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கும் என குறிப்பிடப்படுகிறது

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகளை சுமந்து செல்லக் கூடிய திறன்  ட்ரான்களின் முதல் தொகுதியானது IAFயிடம் வழங்கப்பட்டுள்ளது.
  • செங்குத்து மேலேற்றம் மற்றும் இறக்கம் திறன்கள் மற்றும்  வெடிமருந்துகளை சுமந்து செல்லக் கூடிய ட்ரான்களின்(ALS 50) முதல் தொகுதியை இந்திய விமானப்படைக்கு(IAF) டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) ஆனது வழங்கியுள்ளது.
  • இந்த அமைப்பு சோதனைகளின் போது நிர்ணயிக்கப்பட்ட தரை இலக்கை துல்லியமாக தாக்க முடிந்தது மற்றும் கடந்த ஆண்டு லடாக்கில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது அதிக உயரத்தில் இருந்து செயல்படும் திறனையும் கொண்டுள்ளது என நிரூபணமாயுள்ளது.

CSIR நிறுவனமானதுமரபணு விழிப்புணர்வுகுறித்த தனித்துவமான மொபைல் கண்காட்சியை நடத்துகிறது.
  • சிஎஸ்ஐஆர்சிசிஎம்பி, பெங்களூரில் உள்ள என்சிஎஸ்எம்விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்துடன் (விஐடிஎம்) இணைந்து, “சிஎஸ்ஐஆர்ஜிக்யாசாதிட்டத்தின் ஒரு பகுதியாகஜீன்ஹெல்த் கனெக்ட்என்ற நடமாடும் அறிவியல் கண்காட்சியை நடத்தியுள்ளது.
  • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு மரபணுக்கள் மற்றும் மனித உடலில் அவற்றின் பங்கு மற்றும் அவை எவ்வாறு கையாளப்படுகிறது ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.

MyGov, கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து, ‘யுவ பிரதிபாபாடும் திறமை உடையவர்களை அடையாளம் காணுதல்எனும் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது.
  • பல்வேறு வகைகளில் பாடும் திறமை கொண்ட புதிய மற்றும் இளம் திறமைகளை கண்டறிந்து அங்கீகரிப்பதன் மூலம் தேசிய அளவில் இந்திய இசையை அடிமட்ட அளவிலிருந்து ஊக்குவிக்கும் நோக்கத்துடன், MyGov ஆனது கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்துயுவ பிரதிபாபாடும் திறமை உடையவர்களை அடையாளம் காணுதல் மே 10 புதன்கிழமை அன்று தொடங்குகிறது.
  • போட்டிக்கான ஆரம்ப சமர்ப்பிப்பானது, ஒன்றரை மாத காலத்திற்கு திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மியான்மரில் உள்ள ரக்கைனில்  சிட்வே துறைமுகத்தை திறந்து வைத்தார்
  • இந்தியாவின் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் மியான்மரின் துணைப் பிரதமர் அட்மிரல் டின் ஆங் சான் ஆகியோர் ரக்கைனில் உள்ளசித்வே துறைமுகத்தைதிறந்து வைத்தனர்.
  • இந்த சிட்வே துறைமுகத்தின் செயல்பாடானது இருதரப்பு மற்றும் பிராந்திய வர்த்தகத்தை மேம்படுத்துவதோடு ராக்கைன் மாநிலத்தின் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பங்களிக்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த துறைமுகமானது  இந்திய அரசங்கத்தின் மானிய உதவியின் கீழ், “கலாடன் மல்டிமாடல் டிரான்சிட் தொலைப்போக்குவரத்துதிட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது.


சர்வதேச செய்திகள்

UAE-ன் அபுதாபியில் நடந்த வருடாந்திர முதலீட்டு கூட்டத்தில், கேரளாவிற்கு அரங்கம்(Kerala Pavilion) திறந்து வைக்கப்பட்டுள்ளது மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு விருதுக்கு தமிழ்நாடானது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • கேரள ஸ்டார்ட்அப் மிஷனை ஊக்குவிக்க அபுதாபியில் கேரள அரங்கமானது(Kerala Pavilion) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் என்பது மாநிலத்தின் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை ஆதரிக்கும் மற்றும் அதிகரிக்கும் ஒரு கட்டமைப்பு ஆகும்.
  • அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில் முதலீட்டு ஊக்குவிப்பு விருதுக்கு தமிழ்நாடு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, அதன் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. “வழிகாட்டுதல் தமிழ்நாடுஎன்பது தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமாகும். இது வருங்கால முதலீட்டாளர்களைச் சென்றடைவதற்கும் அவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதற்கும் உருவாக்கப்பட்டதாகும்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் ராக்கெட் லேப், “வெப்பமண்டல புயல்களின்வளர்ச்சியைக் கண்காணிக்கும் இரண்டு நாசா செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
  • ராக்கெட் லேப் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாசாவுக்காக இரண்டுடோஸ்டர்அளவிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது மற்றும் இது சூறாவளி மற்றும் சூறாவளி வளர்ச்சியின் மணிநேர புதுப்பிப்புகளை வழங்கவும்கணிப்புகளை மேம்படுத்தவும், வடிவமைக்கப்பட்ட நான்குகியூப்சாட்களைஉள்ளடக்கியதாகும்.
  • இது வெப்பமண்டல புயல்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் அவை எவ்வாறு தீவிரமடைகின்றன என்பதைப் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

NCGG நிறுவனமானது  பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவுகளில் இருந்து வரும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • மாலத்தீவு மற்றும் பங்களாதேஷின் அரசு ஊழியர்களுக்கானஇரண்டு வார திறன் மேம்பாட்டுத் திட்டமானதுமுசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் (NCGG) தொடங்கியுள்ளது. இதில் மாலத்தீவைச் சேர்ந்த 50 அரசு ஊழியர்களும், வங்கதேசத்தைச் சேர்ந்த 45 அரசு ஊழியர்களும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்என்பது இந்து குறிப்பிடத்தக்கது.
  • NCGG இன் இயக்குனர் பாரத் லால் அவர்களால் பிரதமர் நரேந்திர மோடியின்வசுதைவ குடும்பம்மற்றும்அருகில் உள்ள நாடுகள் முதலில்என்ற கொள்கைகளுக்கு இணங்க இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மாநில செய்திகள்

செகந்திராபாத்தில் உள்ள வாரசிகுடா என்னும் பகுதியில்ஜன் அவ்ஷதி கேந்திராதிறப்பு.
  • ஜன் அவ்ஷதி கேந்திரா திட்டம்மூலம் மலிவு விலையில் சுகாதார சேவையை வழங்குவது மற்றும் இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • வழக்கமான மருத்துவக் கடைகளில் கிடைக்கும் விலையை விட 50-90 சதவீதம் குறைந்த விலையில் இந்த கேந்திரங்களில் மருந்துகள் கிடைக்கும் என்றும், குறைந்த விலையில் மருந்துகள் வழங்கப்பட்டாலும் தரத்தில் எந்தவித சமரசம் இல்லை எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் ஆய்வுகள்

கீழடியில் 1000க்கும் மேற்பட்ட பனை ஓடுகள் கண்டுபிடிப்பு

  • கீழடியில் சமீபத்தில் நடத்தப்பட்ட 9ஆம் கட்ட அகழாய்வில் ஒரே குழியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டபானை ஓடுகள்கண்டெடுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் இங்கு மண்பாண்ட உற்பத்தி கூடம் செயல்பட்டிருக்க வாய்ப்பிருக்கலாம் என  கருதப்படுகிறது.
  • குழி தோண்டப்பட்ட  இடங்களில் எல்லாம் பானை ஓடுகளாக இருப்பதாகவும்  அதில் எழுத்துகளோ, படங்களோ இல்லாமல் வெறும் பானை ஒடுகளாக கிடைத்த வண்ணம் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.


விருதுகள்

பார்பரா கிங்சோல்வர் மற்றும் ஹெர்னான் டயஸ் ஆகியோருக்கு புலிட்சர் பரிசு.
  • பார்பரா கிங்சோல்வர் மற்றும் ஹெர்னான் டயஸ் ஆகியோருக்கு புனைகதை பிரிவில் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.பார்பரா கிங்சோல்வரின்நவீன டிக்கன்ஸ் கிளாசிக் டேவிட் காப்பர்ஃபீல்ட்மற்றும் ஹெர்னான் டயஸின்டிரஸ்ட், 1920 களில் நியூயார்க்கில் அமைக்கப்பட்ட செல்வம் மற்றும் ஏமாற்று பற்றிய புதுமையான கதை”  ஆகிய புத்தகங்களுக்காக இந்த பரிசானது வழங்கப்பட்டுள்ளது
  • புலிட்சர் பிரிவின் 105 ஆண்டுகால வரலாற்றில், இரண்டு புனைகதை புத்தகங்களுக்கு விருது வழங்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளையாட்டு செய்திகள்

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2023 – அஜித் நாராயணா வெள்ளி பதக்கம்
  • இந்திய பளுதூக்கும் வீரர்கள் 2023 ஆம் ஆண்டு தென் கொரியாவின் ஜின்ஜூவில் நடைபெற்ற ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் நாராயணா வெள்ளிப் பதக்கங்கம் வென்றார்.
  • அஜித் நாராயணா, அச்சிந்தா ஷூலி, பிந்தியாராணி தேவி ஆகிய 3 நபர்களும் தங்களுக்கேற்ற எடை பிரிவில் பங்கேற்று வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.

கார்லோஸ் அல்கராஸ்மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில்வெற்றி பெற்றார்.
  • ஸ்பெயின் தலைநகரில் நடந்தமாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின்இறுதி சுற்றில் அல்கராஸ் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜான்லெனார்ட் ஸ்ட்ரஃப்பை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • கார்லோஸ் அல்கார்ஸ் தனது இரண்டாவது மாட்ரிட் ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் உலக தரவரிசையில் முதலிடத்திற்கு திரும்பியுள்ளார்.

முக்கிய தினம்
ஐரோப்பா தினம்
  • ஐரோப்பா தினம் என்பது ஐரோப்பா முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில் மே 09 அன்று கொண்டாடப்படுகிறது. 9 மே 1950 இல்ஷூமன் பிரகடனத்தில்நாடுகள் கையெழுத்திட்டதை தொடர்ந்து ஐரோப்பா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது
  • அமைதி மற்றும் செழிப்புக்கான எனது பார்வைஎன்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டுக்கான ஐரோப்பா தினம் கொண்டாடப்படுகிறது.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!