ஏப்ரல் 19 வரை பகுதிநேர பொதுமுடக்கம் அமல் – மாநில அரசு அறிவிப்பு
நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ராய்பூர் மாவட்டத்தில் பகுதிநேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொது முடக்கம்:
நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது மிக அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக இருந்து வருகிறது. இதனால் நாட்டில் சில மாநிலங்களில் இரவு நேர பொதுமுடக்கம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை மிக தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் அதிகமாக கொரோனா பரவும் மாநிலங்களுள் ஒன்றாக திகழ்கிறது சத்திஸ்கர் மாநிலம்.
TN Job “FB Group” Join Now
இந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக அந்த மாநிலத்தின் ராய்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2821 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இதனை தடுக்கும் வகையில் அங்கு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
அந்த வகையில் ராய்பூர் மாவட்டத்தில் ஏப்ரல் 9ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி வரை பகுதிநேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமல் என்றும் பொதுமுடக்கம் பொழுது மாவட்டத்தின் எல்லைகள் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அத்யாவசிய தேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு இந்த பொதுமுடக்கத்தில் இருந்து விலக்கு என்றும் தெரிவித்துள்ளனர்.