கடலூர் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 2,401 பேருக்கு பணிநியமன ஆணை!!
கடலூரில் நேற்று நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட 14,896 வேலை தேடுபவர்களில் 2,401 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் உள்ள வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு வேலைவாய்ப்பு துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கொரோனா காரணமாக பல தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின.
அண்ணாமலை பல்கலையில் ‘பெண்ணியல்’ பட்டப்படிப்பு துவக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!!
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பத்தில் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து 171 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்ட மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
யுபிஎஸ்சி தேர்வு – 1312 பேர் ‘ஆப்சென்ட்’!!
இந்த முகாமில் 14,896 பேர் கலந்து கொண்டனர். அதில் 2,401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் போட்டித் தேர்வுகளுக்கான திறன் பயிற்சியில் 228 பேர் தேர்வாகியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் வனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எகசானலி, கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் போன்ற பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்டு பணிநியமனம் பெற்றவர்கள், அரசு வேலை வாய்ப்பு பெற பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
I want job seeker