தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்…!! ” அரசு அதிரடி உத்தரவு”..!!
நாட்டில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால், புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்க மக்கள் கூட்டம் கடைகளில் பெருக்கெடுத்து காணப்படுகிறது. மேலும், அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் பொதுமக்களை எச்சரித்து வருகிறார்கள். அந்த வகையில், புதுச்சேரி அரசானது தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
TET-2024 தேர்வுக்கு 10,000 காலிப்பணியிடங்களா…? முழு விவரம் உள்ளே”..!!
அதாவது, புதுச்சேரி உயர் நீதிமன்ற உத்தரவின் படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று புதுச்சேரி மக்களுக்கு சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

























