இந்தியாவில் ஒரே நாளில் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா – 1341 பேர் உயிரிழப்பு!!
இந்தியாவில் கடந்த ஒரு நாளில் மட்டும் 2.34 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 1,341 உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டி உயர்ந்து வருகிறது. ஆனால் முழுமையான முறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்படவில்லை. பொது மக்களும் கொரோனா அச்சம் இல்லாமல் வழக்கம் போல முகக்கவசங்களை அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்து வருகின்றனர். அதனால் தினமும் கொத்துக்கொத்தாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,34,692 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனவால் நேற்று ஒரு நாள் பாதிப்பு, குணமடைந்தோர் வீதம், பலியானோர் எண்ணிக்கை ஆகிய தகவல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2,34,692 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் நேற்று 1,341 பேர் பலியாகியுள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை – புதிய ஊதிய கொள்கை தகவல்!!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று ஒரே நாளில் 1,18,302 பேர் வீடு திரும்பிய நிலையில், நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,71,220 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது வரை 16,79,740 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் நேற்று வரை 11,99,37,641 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அடிப்படையில் கடந்த நாட்களை விட பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.