வார இறுதி நாட்களில் ஊரடங்கு – அரசு திட்டம்!!
மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலையை எதிர்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று அதிர்ச்சியடையும் விதத்தில் தினமும் உயர்ந்து வருகிறது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் போராடி வருகின்றன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 17,282 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து 104 பேர் பலியாகியுள்ளனர். இதனடிப்படையில் டெல்லியில் கொரோனா தொற்றின் அதிகபட்ச புதிய பாதிப்பு நேற்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாலும் அம்மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஏழு மணி வரை இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
நெஸ்ட் நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு – ஏப்ரல் 30 கடைசி நாள்!!
டெல்லியில் முழு ஊரடங்கு அறிவிக்கும் எண்ணம் இல்லை என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் அனில் பைஜலுடன் அவர்களுடன் இன்று (15-04-2021) ஆலோசனை மேற்கொண்டார். அதில் சனி மற்றும் ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் டெல்லியில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.