இந்தியாவில் இளைஞர்களை குறிவைக்கும் கொரோனா – சுகாதாரத்துறை எச்சரிக்கை..!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இளைஞர்கள் என்று மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை இந்தியா ஏற்றுமதி செய்யாவிட்டால் தகுந்த பதிலடி தரப்படும் – டிரம்ப் எச்சரிக்கை..!
இந்தியாவில் வெறியாட்டம்..!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் 4,778 மேற்பட்டோர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 382 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளவர்கள். கொரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் 136 பேர்.
இளைஞர்களை அதிகம் தாக்கும் கொரோனா..!
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 41 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி 21 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள். 40 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்களில் இதுவரை 33 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 17 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்கள். 20 வயதிற்கு உட்பட்டவர்கள் 9 சதவீதம் பேர் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |