மே மாத இறுதியில் கொரோனா பாதிப்பு சரியும் – பிரபல தடுப்பூசி நிபுணர்!!
கொரோனா வைரஸ் இன்னும் 1 அல்லது 2 உச்சங்களை தொடும். மேலும் அதன் பாதிப்பானது தற்போது போல மோசமாக இருக்காது, சரியத் தொடங்கும் என பிரபல தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு சரியும் :
நாடு முழுவதும் கொரோனா இராண்டாம் அலை தீவிரமாக பரவி நாள்தோறும் புதிய உச்சம் அடைந்து வருகிறது. கடந்த வருட பரவலை விட தற்போதைய வைரஸ் பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,0000 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவின் வட மாநிலங்கள் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. மக்களிடையே அதிக அச்சம் நிலவுகிறது.
இன்னும் 1 அல்லது 2 உச்சத்தை கொரோனா பாதிப்பு அடையும். ஆனால் தற்போது போல கடுமையாக இருக்காது என பிரபல தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார். தற்போதைய இரண்டாம் கொரோனா வைரஸ் நடுத்தர மக்களையும், கிராமப்புற மக்களையும் தாக்க தொடங்கியுள்ளதாக கூறுகிறார். தடுப்பூசிகள் மிகவும் அவசியம். கட்டாயம் மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர் கூறுகிறார்.
தமிழக முதலமைச்சரின் முதல் கையெழுத்து – 5 முக்கிய திட்டங்கள் அமல்!!
மேலும் இந்திய பெண் பத்திரிகையாளர்களுடைய இணைய வழி கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய பிரபல தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் இந்த மாத இறுதிக்குள் கொரோனா பாதிப்பு சரிய தொடங்கும் எனவும், இது கடுமையான வைரஸ் காய்ச்சலாக உருவெடுக்கும் பருவ காய்ச்சல்கள் போல் வந்து செல்லும். பிறகு உடம்பில் தங்கி விடும் என கூறினார். எனவே மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற வேண்டும். கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் நோய் எதிர்ப்பு சக்தியால் மட்டுமே நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்