இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? அதிகரிக்கும் கொரோனா தொற்றால் மக்கள் அச்சம்!!
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமோ என்கிற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 133 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று:
இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் தொற்று பாதிப்பு குறைந்ததால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பின் படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 17,921 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,62,707 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 133 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழக காவல் துறையினருக்கு இனி விடுமுறை இல்லை – சட்டமன்ற தேர்தல் எதிரொலி!!
நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,58,063 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 20,652 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,20,046 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,84,598 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தற்போதைய நிலவரங்கள் அடிப்படையில் குணமடைந்தோர் விகிதம் 96.96%, உயிரிழந்தோர் விகிதம் 1.40% மற்றும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.64% ஆகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமோ? என்கிற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.