கொரோனா தடுப்பூசிக்கு ஜிஎஸ்டி தள்ளுபடி – மத்திய அரசு திட்டம்!
கொரோனா தடுப்பூசி மீதான ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜி.எஸ்.டி :
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்குகளை அறிவித்து மக்களின் நடமாட்டத்தை குறைக்க மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகமாக உள்ளதாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதனால் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலில் 18 வயது மேற்பட்டோர்க்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் ஒவ்வொன்றாக இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோசுக்கு ரூ.1200 வரை வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்திய விமானங்களுக்கு தடை – கம்போடியா, பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!!
இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநிலங்கள் கோவிட்-19 தடுப்பூசிகளை வாங்கி வருகின்றன. தற்போதைய பொருளாதார சூழலை கருத்திற்கொண்டு இதன் ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு குறைக்க உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா நிவாரணமாக மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இதனால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்