கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது – முக்கிய அறிவிப்பு!!!
கொரோனா தொற்று:
கொரோனா தொற்று கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்து 2020 மார்ச் மாத தொடக்கத்தில் அதன் முழு உச்சத்தை அடைந்தது. இந்த தொற்றினால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். நோய் தாக்கம் அதிகமாக இருந்த சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஊரடங்கு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு – விண்ணப்ப கால அவகாசம் இன்றுடன் நிறைவு!!!
தடுப்பூசி:
கொரோனா நோய் பரவத் தொடங்கியதில் இருந்து பல முக்கிய நாடுகளும் கொரோனா நோய்க்கான தடுப்பூசியை கண்டிபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியது. தடுப்பூசி கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் உடனே அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்காது என்று என்று அரசு அறிவித்தது. அரசு நிர்ணயித்துள்ள முன்னுரிமை வரிசையின் படி தான் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.
நிபந்தனை:
தேசிய இரத்தமாற்ற சபை மற்றும் மத்திய மனித மற்றும் குடும்ப நல அமைச்சகம் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு அல்லது கோவாக்சின்) போட்டுக் கொண்டவர்கள் தங்களின் இரண்டு கட்ட தடுப்பூசிக்கு இடைப்பட்ட காலத்திலும் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்ட 28 நாட்கள் வரையிலும் இரத்த தானம் வழங்கக் கூடாது என்று அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்