கொசுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா ?!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வெகு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொசுக்கள் மூலம் கொரோனா பரவுகிறது என்ற வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவது போல அது தொடர்பான வதந்திகளும் பரவி வருகின்றன. இதுபோன்று பூண்டு மற்றும் மது போன்றவை மூலம் கொரோனாவை தடுக்கலாம் என கூறப்படும் வதந்தியை மறுத்துள்ள சுகாதார அமைச்சகம் இவற்றால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது என விவரித்து உள்ளது.
பள்ளி பாடப்புத்தகங்களில் கொரோனா வைரஸ் குறிப்புகள்!
கொரோனா வைரஸ் தொற்று கொண்ட ஒருவர் மூலம்தான் பரவும் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதிலும் குறிப்பாக வைரஸ் தொற்று கொண்ட நபர் ஒருவருக்கு அதற்கான அறிகுறிகள் இல்லை என்றாலும் அந்த நபர் மூலம் பரவும் என உறுதிபடுத்தி இருக்கிறது
இதைப்போல எல்லாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும் விளக்கம் அளித்து இருக்கிறது. குறிப்பாக காய்ச்சல், குளிர், இருமல் போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள், சுகாதார பணியாளர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மீதமுள்ளவர்கள் அணிய தேவையில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
1508 டெக்னீசியன்கள் & 1000 செவிலியர் காலிப்பணியிடங்களை அவசரமாக நிரப்பும் தமிழக அரசு !!!
முறையான தடுப்பு மருந்து இல்லாத நிலையில் மக்கள் இது போன்ற வதந்திகளை நம்பும் அவலம் ஏற்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |