கொரோனா நோயாளியின் குடும்பத்தினருக்கும் தனிமை கட்டாயம் – மாநகராட்சி வலியுறுத்தல்!!
தனிமையில் உள்ள கொரோனா நோயாளியின் குடும்பத்தினரும் கண்டிப்பாக வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
கொரோனா நோயாளிகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை மையம் ஆகியவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பிற்கு முன்னர் – வியாபாரிகள் தகவல்!!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை வீட்டில் இருந்தே தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள இயலாதவர்கள் அரசு சிகிச்சை மையத்தில் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வார்கள். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் சேர்த்து தனிமைபடுத்திக் கொள்வார்கள்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா நோயாளியின் குடும்பத்தினரும் வீட்டில் இருந்து தங்களை தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும். விதிமுறைகளை மீறினால் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ள நோயாளிகள் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள். தனிமையில் இல்லாமல் வெளியில் சுற்றும் கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினரும் தனிமை முகாமிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்