கொரோனா நோய்த்தொற்றால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் ஆபத்து – ICMR எச்சரிக்கை!!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், நீண்ட நாட்களாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு புதிய பாதிப்பை ஏற்படுத்தும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பரவல் எச்சரிக்கை:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் கடந்த ஆண்டை போல இல்லாமல் இந்த ஆண்டு அதிகளவில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு 2 லட்சம் ரெம்டெசிவர் மருந்துகள் – இன்று வருகை!!
இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு புதிய பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களின் உடலில் மியுகோமிகோலிஸ் என்னும் ஒரு வகை பூஞ்சை தொற்று உருவாகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த பூஞ்சை தொற்று மனித உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மனித உடலில் நோய் எதிர்ப்பு திறனை வெகுவாக குறைகிறது. இந்த பூஞ்சை தொற்று, காற்றில் பறந்து உடல் நலம் பாதித்தவர் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இவர்களின் கண்கள் மற்றும் மூக்கை சுற்றி சிவப்பாக காணப்படும். மேலும், கண் அல்லது மூக்கை சுற்றி வலி, தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், ரத்த வாந்தி உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பூஞ்சை தாக்காமல் இருக்க முகக்கவசம் அணிவதே ஒரே வழி என ICMR தெரிவித்துள்ளது.