தமிழகத்திற்கு 2 லட்சம் ரெம்டெசிவர் மருந்துகள் – இன்று வருகை!!
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 2 லட்சம் ரெம்டெசிவர் மருந்துகளை இன்று தமிழகத்திற்கு அனுப்ப இருக்கிறது.
கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. ஒரு நாளில் மட்டும் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 25,000க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. பாதிப்புகள் அதிகரிக்க அதிகரிக்க பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி!!
பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ தேவைகளுக்கும் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். அது உயிர் காக்கும் மருந்து அல்ல என்று மத்திய அரசு கூறினாலும், நாடு முழுவதும் அந்த மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஒருவருக்கு ஆறு குப்பிகள் மட்டுமே வழங்கப்படும். தற்போது திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மருந்தின் விற்பனையை அரசு துவங்கியுள்ளது. தமிழகத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவர் மருந்துகளை அளிக்க மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியதை ஏற்று இன்று 2 லட்சம் ரெம்டெசிவர் மருந்துகள் தமிழகத்திற்கு வர இருக்கின்றன. இதனால் தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.