தமிழக கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – பெற்றோர்கள் அச்சம்!
தமிழகத்தில் சில பகுதிகளில் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கல்லூரி மாணவர்:
நாடு முழுவதும் கொரோனா அலை தீவிரமாக பரவியதால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். முதல் மற்றும் இரண்டாம் அலை என கொரோனா உருமாறி பரவியது. நாளுக்கு நாள் நோய் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இறப்பு விகிதமும் அதிகரித்தது. அதனை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நோய் பரவும் விகிதம் படிப்படியாக குறைய தொடங்கியது.
தீபாவளி பணம், முதியோர் பென்ஷன் பெற ‘இது’ கட்டாயம் – ஆளுநர் அறிவிப்பு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக புகார்கள் குவிந்து வந்தன.
ஐஸ்வர்யாவை துரத்தும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம், இரண்டாக உடையுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அதனை தொடர்ந்து சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 13 மாணவர்களும் வேப்பேரியில் உள்ள சித்தா கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதி மாணவர்கள் 570 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கோவை நர்சிங் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.