தீபாவளி பணம், முதியோர் பென்ஷன் பெற ‘இது’ கட்டாயம் – ஆளுநர் அறிவிப்பு!
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க அரசு பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அத்தியாவசிய கடைகள் இயங்கவும் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் விளைவாக வைரஸ் பரவல் குறைந்து வந்தது. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.
ஐஸ்வர்யாவை துரத்தும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம், இரண்டாக உடையுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அரசு மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தடுப்பூசி முகாம்களை அமைத்து தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. தடுப்பூசிகள் கொரோனா உயிர்க்கொல்லி நோயிலிருந்து நம்மை காக்கும் பேராயுதமாக உள்ளது. அதனால் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசிகளை செலுத்த அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசிகளை செலுத்த மக்களை தூண்டும் வகையில் புதுச்சேரியில் செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் வழங்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் – தனித்து களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்! கமல்ஹாசன் அறிவிப்பு!
முதியோர் மற்றும் விதவைகள் உதவித்தொகை பெற வேண்டும் என்றால் அவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தீபாவளிக்கு அரசு சலுகைகள் அறிவித்தல் அதை பெறுவதற்கு தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் 15 நாட்களுக்குள் 100% செலுத்தி கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறும் என்று துணைநிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.