பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவின் மரணம் கனவு தானா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
தற்போது மக்கள் விரும்பி அதிகமாக பார்ப்பது சீரியல்களை தான். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். தெலுங்கு சீரியல் ஒன்றினை தழுவி எடுக்கப்பட்டு வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலின் முக்கிய கட்டமாக கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.
நடிகர் சூரியின் குடும்ப திருமண விழாவில் 10 பவுன் தங்க நகை திருட்டு – விசாரணை தீவிரம்!
இதனால் குடும்பத்தினர் அனைவரும் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும், கண்ணன் மீது உள்ள பாசத்தால் அனைவரும் கவலையும் கொள்கின்றனர். அதனால் அவருக்கு தெரியாமல் உதவுகின்றனர். தற்போது கண்ணன் வேலை தேடி வேறு ஒரு ஊருக்கு செல்லுகிறார். அப்போது தனது போனையும் மறந்து வைத்து வந்து விடுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் லட்சுமி கண்ணனை நினைத்து மிகவும் வருந்துகிறார். அவரது உடல் நலனையும் கெடுத்து கொள்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதற்கான உண்மை காரணம் – அகிலன் ஓபன் டாக்!
சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் அவர் மரணம் அடைவது போல கட்டப்பட்டு உள்ளது. அனைவரும் லட்சுமி மரணம் அடைந்ததை நினைத்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுகின்றனர். இனி இது போன்ற காட்சிகளே இடம் பெறும் என்று கூறப்பட்டாலும், இது வீட்டில் யாருக்கேனும் வந்த ஒரு கனவாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த இது போன்ற யுக்திகளை பயன்படுத்தலாம் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.