இந்தியாவில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு – மத்திய அரசு திட்டம்?
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் மாநிலங்களில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பண்டிகைகள் கொண்டாடுவதற்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கொரோனா அதிகம் பரவி வரும் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெலுங்கானாவில் பண்டிகைகள், பொது கூட்டங்கள், பொது கொண்டாட்டங்கள், ஷாப் இ பாரத், ஹோலி, உகாதி, ராம நவமி, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, ரம்ஜான் ஆகிய பண்டிகைகளில் மக்கள் கூடுவதற்கு ஏப்ரல் 30 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து டெல்லியிலும் திருமணம், இறப்பு நிகழ்வுகளில் பங்கு பெறுவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் 100 முதல் 200 பேர் வரை பங்கு பெறலாம் எனவும், இறப்பு நிகழ்வுகளில் 50 பேர் வரை கலந்து கொள்ளலாம் எனவும் அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தலைமையில், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
பான் & ஆதார் கார்டு இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!!
இந்த கூட்டத்தில் கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்வது குறித்தும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் அறிவிப்பது குறித்தும் பேசப்படவுள்ளது. தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா விதிமுறைகளை மக்கள் சரியாக கைகொள்ளாவிட்டால், ஊரடங்கு அறிவிக்க திட்டத்தை தயார் செய்ய வேண்டும் என மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அம்மாநில அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனையடுத்து முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்