இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கோவாவில் இன்று (ஏப்ரல் 30) முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவாவில் ஆள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
முழு ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலங்கள் தோறும் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. அதன் படி கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மஹாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், ஹரியானா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அத்தியாவசிய சேவைகள் தவிர பிற சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குடன் கூடிய வார இறுதியில் பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மே 13 வரை மினி ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
அதே போல கோவாவில் தினமும் 18 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது. அதனால் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு நான்கு நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என அரசு முடிவெடுத்தது. அதன்படி நேற்று (ஏப்ரல் 29) இரவு 7 மணி முதல் மே 3 ஆம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த ஊரடங்கின் போது மருந்து உட்பட அத்தியாவசிய சேவைகள் தவிர பிறவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தவிர சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு முழு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் சாலைகளை கண்காணிக்க ரோந்து பணிகள் நடைபெற்று வருவதாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.