இந்தியாவில் ஒரே நாளில் 26,041 பேருக்கு கொரோனா தொற்று – 276 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழ் குறையாமல் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 26,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா நிலவரம்:
இத்தியாவில் கொரோனா 2வது அலையின் அச்சுறுத்தல் தற்போது வரை இருந்து வரும் நிலையில் நேற்றைய தினம் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,326 என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் புதிதாக 26,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது உறுதியாகி உள்ளது.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிப்போர் கவனத்திற்கு – தமிழக அரசு அறிவுறுத்தல்!
இதனை தொடர்ந்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3.36 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவலில் கேரள மாநிலம் முதன்மையாகவும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 8 மணி வரை உள்ள நிலவரப்படி 276 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,47,194 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 29,621 ஆகும். இதனால் மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,29,31,972 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ‘பாரத் பந்த்’ எதிரொலி – பள்ளி, கல்லூரிகள் மூடல்! கடைகள் அடைப்பு, பலத்த போலீஸ் பாதுகாப்பு!
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,99,620 ஆகும். நேற்று நடைபெற்ற முகாமில் 38,18,362 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரையில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக 86.01 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 11,65,006 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 56,44,08,251 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.