இன்று ‘பாரத் பந்த்’ எதிரொலி – பள்ளி, கல்லூரிகள் மூடல்! கடைகள் அடைப்பு, பலத்த போலீஸ் பாதுகாப்பு!
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொள்ளாத விவசாய சங்கங்கள் அந்த 3 சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி இன்று நாடு தழுவிய பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
பாரத் பந்த்:
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தகைய போராட்டமானது வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும், விலைவாசி உயர்வை கண்டித்தும் நடத்தப்படுகிறது. இதில் கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் இத்தகைய எதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தங்கள் குடும்பத்தோடு போராடி வருகின்றனர். இதற்க்கு இடையில் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்து மத்திய அரசு 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒன்றரை வருடங்களுக்கு வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக கூறியது.
தமிழகத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – இன்று முதல் தொடக்கம்!
ஆனால் வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ‘சம்யுக்தா கிசான் மோச்சா’ வேளாண் சட்டங்களை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இத்தகைய விவசாய சங்கங்களை ஆதரிக்கும் விதமாக பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய பாரத் பந்த் காரணமாக தமிழகத்தில் தஞ்சாவூர், கும்பகோண ரயில் நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க திட்டமிடும் வேணு – நெஞ்சு வலியுடன் வைக்கும் நிபந்தனை!
மேலும் கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சரியான முறையில் இயங்கவில்லை. குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகின்றன . இதனை தொடர்ந்து ஹரியானா மற்றும் பஞ்சாப் இரண்டுக்கும் இடையேயான சம்பு எல்லையை விவசாயிகள் சங்கம் 4 மணிவரை முடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆந்திர மாநில அரசு பாரத் பந்த்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.