ஒரே நாளில் 3.29 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு – 3,876 பேர் உயிரிழப்பு!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.29 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,876 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3,29,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!!
நேற்று நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று புதிதாக 3,29,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,56,082 கோடியாக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3,876 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த உயிரிழப்புகள் 3,56,082 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,53,818 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,90,27,304 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு 37,15,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82.39% ஆகவும், உயிரிழந்தோர் சதவிகிதம் 1.09% ஆகவும், சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 16.53% ஆகவும் அதிகரித்துள்ளது.