நாடு முழுவதும் 16 மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா – மத்திய அமைச்சர்!!
நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 70 மாவட்டங்களில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பு:
சீனாவில் ஒரு மூலையில் தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நாட்டையே புரட்டி போட்டது. அதனை தடுக்க நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக மக்களின் பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. மாநில அரசுகளும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மத்திய அரசின் நிதி உதவிகளை நாடினார்கள். அதன்பின் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பரவ ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், “நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களில் 70 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 15 நாட்களில் 150 சதவிகிதத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும் வயது 65 ஆக அதிகரிப்பு – பாராளுமன்ற குழு பரிந்துரை!!
நாட்டில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவிகிதம் பேர் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.8 சதவிகிதமாக உள்ளது. மக்கள் கொரோனா தாக்கம் குறைய தொடங்கிய நேரத்தில் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாததே இதற்கு காரணமாக உள்ளது. நாடு முழுவதும் 3.51 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் இவ்வாறு கொரோனா பரவுவது வேதனை அளிக்கிறது”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.