இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா – 497 உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 497 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,353 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,20,36,511 ஆக அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது நோயிலிருந்து நம்மை பாதுகாக்க தடுப்பூசிகள் மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளன. அதனால் அனைத்து மாநிலங்களிலும் 18 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 41,38,646 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!
இதுவரை 51,90,80,524 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதிதாக 497 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,29,179 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தை ஒப்பிடும் போது உயிரிழப்பு விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 40,013 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழக தனியார் பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – 85% கல்வி கட்டண வசூல்!
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,12,20,981 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,86,351 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.