ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குடியிருப்பு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் தற்போது மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மஹாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சில மாநிலங்களில் மட்டும் கொரோனா பரவல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்கும் முடிவை அரசு ஒத்தி வைத்துள்ளது. அந்த வகையில் ஹிமாச்சலப் பிரதேச அரசு 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகளை ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் மீண்டும் திறந்தது.
தமிழக தனியார் பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – 85% கல்வி கட்டண வசூல்!
ஆனால் இந்த வகுப்புகள் குடியிருப்பு பகுதிகளில் மட்டும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஹிமாச்சலப் பிரதேச அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘ஆகஸ்ட் 11 முதல் 22 வரை குடியிருப்பு பள்ளிகள் தவிர மற்ற அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும். இருப்பினும், ஆசிரியர் மற்றும் கற்பித்தல் பணியில் அல்லாத ஊழியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும். மேலும் குடியிருப்பு பள்ளிகள் செயல்படுவதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கல்வித்துறை அறிவிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட மக்கள் கவனத்திற்கு – கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து!
இதற்கிடையில் ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 419 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 1 இறப்பு பதிவாகியுள்ளது. எனினும் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கு முன்பு, முடிந்தவரை ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு தடுப்பூசி போட மாநில அரசு முயற்சிக்கிறது. இதை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மதிய உணவு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியார்களுக்கு இரண்டு நாள் சிறப்பு வகுப்புகளை அரசு நடத்தியது குறிப்பிடத்தக்கது.