வங்கி தொடர்பான வாடிக்கையாளர்களின் புகார் தீர்க்காத பட்சத்தில் ஆர்பிஐ நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
RBI வைத்த செக்:
நாடு முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் கணக்குகள் மற்றும் நிர்வாகம் தொடர்பாக சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இது குறித்த புகார்களை வங்கிகளிடம் தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆர்பியை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலின் படி, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் இருக்கும் புகார்களை தெரிவித்த பின்னரும், வங்கி சார்பாக அந்த பிரச்சனைக்கான தீர்வு காணப்படவில்லை எனும் பட்சத்தில் இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கலாம்.
ஒருங்கிணைந்த குறை தீர்ப்பாளர் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வங்கி தொடர்பான உங்களது புகார்களை எழுத்துப்பூர்வமாக வங்கிக்கு அளிக்க வேண்டும். இதன் பிறகு தீர்வு கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் ஆர்பியை உருவாக்கிய cms.rbi.org.in என்ற போர்டலை அணுக வேண்டும். இதில் உங்களது புகார்களை பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் உங்களுக்கு ஒரு புகார் எண் கிடைக்கும். இதன் மூலமாக உங்களது புகார் தொடர்பான நிலையை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
Follow our Instagram for more Latest Updates
TNPSC தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு 2024 – விடைக்குறிப்பு வெளியீடு!