
வங்கியிடம் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த போறீங்களா..? அப்போ கண்டிப்பா இந்த விஷயத்தை பற்றி தெரிஞ்சுக்கோங்க ..
தற்போது ஏறிக்கொண்டே போகும் விலைவாசியை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மேலும், கடன் வாங்க பெரும்பாலான மக்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை முறையிடுவது வழக்கம். அவ்வாறு கடன் பெறும்போது நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளரின் சரிபார்ப்பிற்காக சில ஆவணங்களை சேகரிக்கலாம். இந்நிலையில் நீங்கள் கடனை செலுத்திய பிறகு, எந்தெந்த அத்தியாவசிய ஆவணங்களை பெற வேண்டியது அவசியம் என்று இத்தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
அதாவது, கடன் முடிந்த பிறகு, கடன் பெறும் நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உங்களது அனைத்து அசல் ஆவணங்களையும் சேகரிப்பது மிகவும் அவசியமான வழிமுறையாகும். அந்த வகையில் முதலில் உங்கள் கடன் முழுமையாகத் தீர்க்கப்பட்டதற்கான உறுதி சான்றாக விளங்கும் “நிலுவைத் தொகை இல்லை சான்றிதழை” (NOC) பெற வேண்டும். அதன் பின்னர் சொத்துக்கு எதிராக நிலுவையில் உள்ள உரிமைகோரல்கள் எதுவும் இல்லை என்பதற்காக வழங்கப்படும் “வில்லாமை சான்றிதழ்” (NEC) பெறுவது அவசியம். இதை தொடர்ந்து, கடன் திருப்பிச் செலுத்தியது தொடர்பான அனைத்து வங்கி அறிக்கைகளையும் சேகரிக்கவும். மேலும், முக்கியமாக கடனை வாங்கும் போது நீங்கள் பிந்தைய தேதியிட்ட காசோலைகளை வழங்கியிருந்தால், கடன் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டவுடன் அவற்றை வங்கியிலிருந்து திரும்பப் பெறப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
























