பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 15.03.2024 அன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, Case Worker, Security, Multipurpose Helper ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள் 2024:
- கோயம்புத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) Case Worker, Security, Multipurpose Helper ஆகிய பணிகளுக்கென 11 பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Case Worker பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Degree முடித்தவராக இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
- விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
- இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.6,400/- முதல் ரூ.15,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
- இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 30.03.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.