புதிய ஊதிய விகிதம் அமைக்க குழு அமைப்பு – தமிழக அரசு உத்தரவு!!
தமிழக கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்களுக்கு ஊதிய விகிதம் அமைத்து ஐந்து வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் புதிய ஊதிய விகிதம் அமைக்க தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் கூடுதல் பதிவாளர் அமலதாஸ் அவர்கள் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது.
பழைய ஊதிய விகிதம் முடிவு:
கூட்டுறவு சங்கத்தினரின் ஊதிய விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உயர்த்தப்பட்டது. தற்போது புதிதாக ஊதிய விகிதம் உயர்த்தப்பட வேண்டும் என்று கூட்டுறவு சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன் அவர்கள் இது தொடர்பாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு – ரூ.785 ஆக நிர்ணயம்!!
அதில், தொடக்க கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதம் 1.1.2016 முதல் 30.12.2020 உடன் ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இவர்களுக்கான புதிய ஊதிய விகிதம் குறித்து பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.
பரிந்துரை குழு:
பரிந்துரை குழுவின் தலைவராக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், குழுவின் உறுப்பினர்களாக முக்கிய மண்டலங்களின் பதிவாளர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய ஊதிய விகிதம்:
கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்களின் அகவிலைப்படி, மருத்துவபடி, தேர்வு நிலை, தேக்க நிலை போன்றவற்றை ஆராய்ந்து ஊதிய விகிதத்தை பரிந்துரைக்கும். மேலும், புதிய ஊதிய விகிதத்தினால் முரண்பாடுகள் ஏதும் ஏற்படா வண்ணம் குழுவினர் அறிக்கை தயார் செய்யவும், கூடுதல் செலவினத்தை ஏற்கும் திறன் குறித்து பரிசீலினை செய்து அறிக்கை தயார் செய்யவும் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்