மீத்தேன், 8 வழிச்சாலை, CAA போராட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் மீத்தேன், 8 வழிச்சாலை, குடியுரிமை சட்டத்திற்காக அறவழியில் போராடிய பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்து உள்ளார்.
முதல்வர் அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அதன் பின்னர் மக்களுக்கான பல சிறந்த திட்டங்களை அவர் அமல்படுத்தியுள்ளார். மேலும் கொரோனாவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்ய ரூ.4000 நிவாரண நிதி ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கியுள்ளார்.
பழைய 25 பைசா நாணயத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை பெறலாம் – எப்படி தெரியுமா?
மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் 14 வகை இலவச மளிகை பொருள்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கான இலவச பேருந்து சேவை, தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா சிகிச்சை, செய்தியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தல், மேலும் காவலர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை உள்ளிட்ட மக்களுக்கான பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.
அந்த வரிசையில் சட்டபேரவையில் தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் நிலையில், இறுதி நாளான இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் உரை வழங்கி வருகிறார். அதில் பேசிய முதல்வர் கூறுகையில், மீத்தேன், 8 வழிச்சாலை, குடியுரிமை சட்டத்திற்காக அறவழியில் போராடிய பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளுக்கான சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சமத்துவ புரங்கள் சீரமைக்கப்பட்டு புதிதாக அமைக்கப்படும் எனவும், தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களை சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.