டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் – 25 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டம்!!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டமும், நாகப்பட்டினத்தில் சாலை மறியலும் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்:
திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் பி.முருகானந்தம் பேசினார். அரசு துறைகளில் பணியாற்றும் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
தமிழக மக்களின் குறைதீர்க்க ‘1100’ புதிய தொலைபேசி சேவை திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!!
கோரிக்கை:
அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதுடன், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரந்தர அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். கூட்டுறவு மற்றும் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்.
அங்கன்வாடி- சத்துணவு- துப்புரவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், மேல்நிலை நீர்த்தொட்டி இயக்குவோர், அவுட்சோர்சிங் பணியாளர்கள் ஆகியோருக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்திலும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்