இன்று (அக். 25) 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் – “சித்ராங்” புயல் எச்சரிக்கை!
இந்தியாவில் மேற்கு வங்கக் கடலோரப் பகுதியில் திங்கள்கிழமை அன்று “சித்ராங்” புயல் உருவானது. அதனால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரெட் அலர்ட்:
வங்ககடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதன் பின்னர் காற்றழுத்த மண்டலமாக மாறி பின் நேற்று (அக். 24) சித்ராங் புயலாக மாறியது. இந்த புயல் இன்று வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 மணி நேரத்திற்கு முன்பாகவே நேற்று இரவு இரவு 9.30 மணி முதல் 11.30 வங்கதேசத்தில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக தெற்கு வங்காள மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் சித்ராங் புயல் காரணமாக அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அந்த 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது . மேலும் வடமேற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள சித்ராங் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து செவ்வாய்க்கிழமை மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (அக். 25) சூரியகிரகணம் – வெறும் கண்களால் பார்க்கலாமா? முழு தகவல் இதோ!
Exams Daily Mobile App Download
இந்த புயல் காரணமாக வங்காள விரிகுடாவில் இருந்து நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவில் உள்ள டாக்கா நகரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பர்குனா, நரைல், சிராஜ்கஞ்ச் மற்றும் போலா ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாக 5 பேர் இதுவரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த புயலால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.