கொட்டும் மழை.. களத்திற்ககே சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!!
சென்னையில் இன்றும் (அக்டோபர் 15) , நாளையும் (அக்டோபர் 16) கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று சென்னையின் பல இடங்களில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் மழை, வெள்ள மீட்புப் பணிகளை குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
நாளை தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்த படியே வேலை…!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!
வடசென்னை பகுதியான யானை கவுனியில் மழை தொடர்பான பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


























