தமிழகத்தில் ஒரு கிலோ சிக்கன் ரூ.300க்கு விற்பனை – விலை உயர்வால் திடுக்கிடும் பொதுமக்கள்!

0
தமிழகத்தில் ஒரு கிலோ சிக்கன் ரூ.300க்கு விற்பனை - விலை உயர்வால் திடுக்கிடும் பொதுமக்கள்!
தமிழகத்தில் ஒரு கிலோ சிக்கன் ரூ.300க்கு விற்பனை - விலை உயர்வால் திடுக்கிடும் பொதுமக்கள்!
தமிழகத்தில் ஒரு கிலோ சிக்கன் ரூ.300க்கு விற்பனை – விலை உயர்வால் திடுக்கிடும் பொதுமக்கள்!

தமிழகத்தில் மீன் வரத்து சற்று குறைந்திருப்பதால் விற்பனையாளர்கள் ஒரு கிலோ சிக்கன் விலை ரூ.300 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விலை உயர்வு:

உலகத்தில் தற்போது மீன்பிடிதடை காலம் பின்பற்றப்பட்டு வருவதால் மீன் வரத்து குறைவாக இருக்கிறது. இதனால், சிறிய வகை மீன்களையே ரூபாய் 350 க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையின், மீன் வரத்து மிகவும் குறைந்திருப்பதால் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிக்கன் மற்றும் காய்கறிகளின் விலையும் அதிரடியாய் உயர்த்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை – மீனவர்களுக்காக முக்கிய எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்!

இந்த வருட துவக்கத்தில் சிக்கன் விலை கிலோவுக்கு ரூபாய் 170 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் பின்னர் பிப்ரவரி மாதத்தில் ரூபாய் 200க்கும், ஏப்ரல் மாதத்தில் ரூபாய் 220 என விலை ஏறிக் கொண்டே செல்கிறது. தற்போது திடீரென ஒரு கிலோ சிக்கன் விலை ₹300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும், ஆட்டுக்கறியின் விலை ஒரு கிலோ 900 முதல் 1000 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், சிக்கன், மட்டன், மீன் என அனைத்து விலையும் உயர்த்தப்பட்டிருப்பதால் அசைவ உணவக வியாபாரிகள் தமிழக அரசு இந்த விலைஉயர்விற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அனைத்து பொருட்களின் விலையும் திடீரென உயர்த்தப்பட்டிருப்பதால் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!