இறுதி செமஸ்டர் ஆன்லைன் தேர்வுக்கு கூடுதல் அவகாசம் அறிவிப்பு !
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கு கூடுதல் அவகாசம் அளித்து தற்போது அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
ஆன்லைன் தேர்வுக்கு கூடுதல் அவகாசம் அறிவிப்பு:
யுஜிசி வழிகாட்டுதலின் படி, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு வரும் செப்டம்பர் 30 க்குள் நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டது. அதன் படி அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் தேர்வுகளை நடத்த ஆயுதமாய் வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அண்ணா பல்கலைக்கழகம் நேற்று ஆன்லைன் இறுதி செமஸ்டர் தேர்வுக்கு பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டது. அதில் ஆன்லைன் தேர்வுக்கு 1
மணி நேரம் அவகாசம் வழங்கியது.
அதை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் 1.30 மணிநேரம் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்கள் தேர்வெழுதி முடித்த உடன் விடைத்தாள்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்