சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய நாளை (ஆக 5) இலவசம் – நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!
சென்னை மெட்ரோ நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் மாரத்தான் பங்கேற்பாளர்களுக்கு புதிய வசதியை அறிவித்துள்ளது.
மெட்ரோ நிர்வாகம்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பொதுமக்கள் பலர் மெட்ரோ ரயில் சேவையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மெட்ரோ நிர்வாகம் பயணிகளின் வசதியை மேம்படுத்த பல்வேறு புது புது வசதிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் முக்கிய நாட்களில் அதிக எண்ணிக்கையில் வரும் பயணிகளுக்கு முன்னதாகவே வாட்ஸ்ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள இருப்பவர்களின் வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை அதிகாலை 3.40 மணி முதல் நண்பகல் 12 பனி வரை கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் வசதியை வழங்கி இருக்கிறது.