தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் பல வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய வசதிகள்
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளை அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மெட்ரோ திட்டம் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட பணிகள் 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
VOC துறைமுக ஆணையத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.90,000/- மாத ஊதியம்!
இந்நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் எல்சிடி திரைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஓட்டுநர் இல்லா ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் எல்சிடி திரையில் வர இருக்கும் நிறுத்தங்கள் மட்டுமல்லாது, அந்த இடத்தின் சிறப்புகளும் திரையிடப்படும். மேலும் பயணிகளின் வசதிக்காக மொபைல், லாப்டாப் சார்ஜ் போடும் ஸ்பாட்டுகளும் அமைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.