சென்னை மெட்ரோவில் கட்டண சலுகை ரத்து – ஏப்ரல் 25 முதல் அமல்!!
மெட்ரோ ரயில்களில் அரசு விடுமுறை நாட்களில் 50% கட்டண சலுகை பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது நாளை (ஏப்ரல் 25) முதல் சென்னை மெட்ரோ ரயில் கட்டண சலுகை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்:
கடந்த ஆண்டு கொரோனா நோய்பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து வகையான போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. பின்பு கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா நோய்பரவல் குறைந்து வந்ததால் போக்குவரத்திற்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அந்த வகையில் மெட்ரோ ரயில்களும் இயங்க தொடங்கியது.
TN Job “FB Group” Join Now
இதனால் தக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. மெட்ரோ ரயில்களில் அரசு விடுமுறை நாட்களில் 50% கட்டண சலுகைகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருவது வழக்கம். பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு அமல்படுத்தப்பட்டது.
இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் – ராஜாமணி நியமனம்!!
தற்போது இந்த 50% கட்டண சலுகை தள்ளுபடி செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த கட்டண சலுகை ரத்து நாளை (ஏப்ரல் 25) முதல் அமலுக்கு வரவுள்ளது. நாளை தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக கடும் கட்டுப்பாடுகளுடன் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.