இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் – ராஜாமணி நியமனம்!!
சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று எழுந்த புகாரின் அடிப்படையில் கோவை கலெக்டர் பதவியில் இருந்த ராஜாமணியை தற்போது இந்து அறநிலைத்துறை ஆணையராக நியமித்துள்ளார்.
இந்து அறநிலைத்துறை ஆணையர்:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் சட்டப்பேரவை தேர்தல் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி கோவை கலெக்டர் ராஜாமணி மற்றும் கமிஷனர் சுமித் சரண் மீது புகார் எழுந்தது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக இவர்கள் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரையும் தேர்தல் பணி அல்லாமல் மாற்று பணிகளில் பணிநிமித்தம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும் கோவையில் புதிய கலெக்டர் மற்றும் கமிஷனரை நியமிக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புதிய தேசிய கல்விக்கொள்கை 2021 – தமிழ் மொழி புறக்கணிப்பு!!
தற்போது கோவை மாவட்டத்தின் கலெக்டராக பணிபுரிந்த ராஜாமணிக்கு வேறு ஓர் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் தற்போது இந்து சமய அறநிலைத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அறநிலைத்துறை ஆணையராக திகழ்ந்த பிரபாகர் தற்போது மத்திய அரசின் ஆதார் ஆணையத்தின் மண்டல அலுவலக உதவி தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.