சென்னையில் மத்திய அரசு நிறுவன வேலை – பெண்களுக்கான அறிவிப்பு
மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் இருந்து அதன் Girl’s Hostel Warden பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவன அறிவிப்பின் படி தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் இந்த அரசு பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Kalakshetra Foundation |
பணியின் பெயர் | Girl’s Hostel Warden |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 15.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
கலாக்ஷேத்ரா காலிப்பணியிடங்கள் :
Girl’s Hostel Warden பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 45 வயது உடையவராக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
Kalakshetra கல்வித்தகுதி :
பதிவு செய்யும் பெண்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும், விண்ணப்பிக்க வேண்டிய தகுதியினை பெற்று விடுவர். மேலும் ஆங்கிலத்தில் நல்ல உரையாற்றும் திறன் இருக்க வேண்டும்.
கலாக்ஷேத்ரா ஊதிய விவரம் :
பணியில் சேர்க்கப்படுவோருக்கு ஊதியமாக ரூ.19,864/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் தேர்வு மூலமாகவோ அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்க முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.