மே 1 முதல் கோடை விடுமுறை – உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு!
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெப்பநிலை அதிகமாக இருக்கிறது. இதனை கருத்திற்கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மே 1 முதல் 31ம் தேதி வரை கோடை விடுமுறை என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவித்துள்ளார்.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் மார்ச் மதம் முதல் ஜூன் மாதம் வரை கோடை காலமாகும். இதனால் தினசரி வெப்பநிலை சராசரியை விட அதிகமாக இருக்கும். மேலும் தற்போது கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் வேகமெடுத்து பரவி வருகிறது. அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு பணிகளை மேற்க்கொள்கிறது. மேலும் வெயிலின் தாக்கத்தையும் கருத்திற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்திற்கு மே 1 முதல் 31 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!
இதன்படி திங்கள் & செவ்வாய் கிழமைகளில் மனு தாக்கலும், வியாழக்கிழமை விசாரணையும் நடைபெறும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து தலைமை பதிவாளர் தனபால், நீதிபதிகள் இந்த கோடை விடுமுறை காலத்தில் சுழற்சி முறையில் பணிபுரிவார்கள் என கூறினார். மேலும் சென்னை மற்றும் மதுரை கிளையின் நீதிபதிகளின் பணி நேர அறிக்கையையும் வெளியிட்டார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
I like examsdaily