தமிழக மின்சார ரயில்கள் இயக்க நேரம் மாற்றம் – ஊரடங்கு எதிரொலி!!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இன்று (20-04-2021) முதல் நடைமுறைப்படுத்தபட உள்ளது. அதனால் மாநகரங்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மின்சார ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து:
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இந்த நோய் தட்டுப்பாட்டு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வார இறுதி நாளான ஞாயிற்று கிழமை அன்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உணவகங்கள், சுற்றுலா தலங்கள், போக்குவரத்து போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆம்னி பஸ்களின் இயக்கம் கொரோனா தொற்று முற்றிலும் நீங்கும் வரை ரத்து செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் சென்னை போன்ற மாநகரங்களில் இயங்கி வரும் மின்சார ரயில் சேவையில் நேர மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம், புதுவையில் முழு ஊரடங்கு அச்சம் – சொந்த ஊருக்கு கிளம்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்!!
தமிழக அரசின் அறிவிப்பின்படி இரவு நேர ஊரடங்கின் போது, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரயில்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தின் அடிப்படையில் கொரோனா முன்களப் பணியாளர்கள், ரயில்வே ஊழியர்களுக்காக சில சிறப்பு ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மின்சார ரயில்கள் செயல்படும் நேரங்களிலும் சில மாற்றங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.