தமிழகம், புதுவையில் முழு ஊரடங்கு அச்சம் – சொந்த ஊருக்கு கிளம்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கூடுதல் பெட்டிகள்
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. அதனால் மாநிலத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இதனால் ரயில் நிலையங்களில் வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து வட மாநிலங்கள் செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வசதியாக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாக்பூர், சந்திராகச்சி செல்லும் ரயில்களில் முன்பதிவு இல்லாத கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது. தொடர்ந்து இந்த ரயில்களில் ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 26 ஆம் தேதிகளில் கூடுதல் பெட்டிகளில் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு வெளியீடு!!
புதுச்சேரியில் இருந்து ஹவுரா செல்லும் அதிவேக ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. மேலும் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் வரை செல்லும் சிறப்பு ரயிலில் இரண்டு பொது பெட்டிகள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் இன்று (20-04-2021) முதல் ஏப்ரல் 27 ஆம் வரை கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.