சென்னை மக்களுக்கு ஷாக் நியூஸ்.. மோசமடைந்த காற்றின் தரம் – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்து இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காற்றின் தரம்:
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. அதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்னையில் காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவ.1 வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
மேலும் காற்றின் தரக்குறியீடு 117 முதல் 195 வரை பதிவாகி இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் ஆலந்தூர், அரும்பாக்கம், கொடுங்கையூர், மணலி, பெருங்குடி, ராயபுரத்தில் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக். 23 ஆம் தேதி காற்றின் தரக்குறியீடு 109ம், அக்.24ல் 121ம், அக்.25ல் 127 ஆகவும் பதிவாகி உள்ளது. இந்த தரக்குறியீடு 50யை தாண்டினாலே உடலநல பிரச்சனை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.