சென்னையில் 13 பள்ளிகளுக்கு இன்று (பிப்.9) விடுமுறையா? – வெளியான முக்கிய அறிவிப்பு!

0
சென்னையில் 13 பள்ளிகளுக்கு இன்று (பிப்.9) விடுமுறையா? - வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னையில் 13 பள்ளிகளுக்கு இன்று (பிப்.9) விடுமுறையா? - வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னையில் 13 பள்ளிகளுக்கு இன்று (பிப்.9) விடுமுறையா? – வெளியான முக்கிய அறிவிப்பு!

சென்னையில் 13 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட நிலையில், இன்று (பிப்.9) வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்.

வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நேற்று காலை 10 மணிக்கு பிரபலமான 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று இ-மெயில் மூலம் வந்தது. அதில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் எனவும், முடிந்தால் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், பதட்டம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனே மாநகர காவல் ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர்.

SSC Stenographer விடைக்குறிப்பு வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

அண்ணா நகர்,சாஸ்திரி நகர், பாரிமுனை, கிண்டி, ஆர்.ஏ.புரம், ஓட்டேரி, கீழ்ப்பாக்கம், கோபாலபுரம், துரைப்பாக்கம், நந்தம்பாக்கம், மடிப்பாக்கம், ஆவடிகாவல் ஆணையரக எல்லையில் உள்ள காட்டுப்பாக்கம் அடுத்த கோபுரசநல்லூர், திருமழிசை ஆகிய பகுதிகளில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின் மாணவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டு, பள்ளிகளில் கடும் தேடுதல் பணி நடத்தப்பட்டது. ஆனால், இது புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மிரட்டல் விடப்பட்ட பள்ளிகள் இன்று (பிப்.9) வழக்கம் போல இயங்கும் என பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!