சிறப்பு விருந்தினராக செஃப் தாமு – பாண்டியன் ஸ்டோர்ஸ் வளைகாப்பு நிகழ்ச்சி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு வெகு விமரிசையாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்றைய எபிசோடில் சிறப்பு விருந்தினராக செஃப் தாமு பங்கேற்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் மூர்த்திக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தற்போது மாசமாக உள்ளார். இதனால் கோலாகலமாக தனத்திற்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. வேட்டு, கொட்டுகள் முழங்க தனத்தின் அண்ணன் சீருடன் வருகிறார். பிறகு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முல்லையின் அம்மா, மீனாவின் அம்மா, தனத்தின் அம்மா என அனைவரும் வரிசையாக நலுங்கு வைக்கின்றனர். இறுதியாக மூர்த்தியின் அம்மாவை நலுங்கு வைக்க அழைக்கின்றனர்.
WhatsApp QR Code மூலம் இத்தனை வசதிகளா? முழு விபரம் இதோ!
அவரும் நலங்கு வைத்த பின்னர் தனத்தின் அண்ணன், அண்ணி தனத்திற்கு நகை போடுகிறார்கள். அதே போல மூர்த்திக்கும் நகை போடுகிறார்கள். பின்னர் ஜீவா, கதிர் தனியாக சென்று மூர்த்தியிடம் ஒரு நகையை கொடுக்கிறார்கள். அதனை மூர்த்தி தனத்திடம் கொடுத்ததும், தனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். இந்த நகை தனம் கல்யாணம் ஆன போது அம்மா வீட்டில் போட்டதாக தெரிவிக்கிறார். அதன் பின்னர் சிறப்பு விருந்தினராக செஃப் தாமு வருகிறார்.
Airtel, Jio, Vi ன் ரூ.449 ரீசார்ஜ் திட்டம் – கூடுதல் சலுகை விளக்கம்!
அவரை பார்த்து தனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தனக்கு வெல்லம் மாங்காய் பச்சடி செய்து தருமாறு கேட்கிறார். உடனே தாமு அவருக்கு செய்து கொடுக்கிறார். அதனை சாப்பிட்டு அருமையாக உள்ளதாக அனைவரும் தெரிவித்தனர். இந்த டிஷ்ஷின் அருமை குறித்தும் கர்ப்பிணிகளுக்கு தேவையான குறிப்புகளை பற்றி தாமு அறிவுரை கூறுகிறார். இறுதியாக ஆரோக்கியமாகவும், அளவாகவும் சாப்பிடுமாறு அவர் தெரிவிக்கிறார். இறுதியாக முல்லை, கதிர், மீனா, ஜீவாவின் குத்தாட்டத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.