
நிலவின் மேற்பரப்பில் உறைந்த நிலையில் பனி…!! சந்திரயான் 3 மூலம் கண்டறிந்த செய்தியை வெளியிட்ட இஸ்ரோ…!!
சந்திரயான்-3 என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) மூலம் நிலவின் தரநிலையை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட மூன்றாவதாக செயற்கைக்கோள் ஆகும். மேலும், ஜூலை 14, 2023 அன்று ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் ஆகஸ்ட் 23, 2023 அன்று நிலவில் தரையிறங்கியது. இந்த சந்திரயான்-3 பயணத்தின் முதன்மை நோக்கம், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் உள்ள விக்ரம் மற்றும் பிரக்யான் செயற்கைக்கோள்களில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி நிலவை சோதனை செய்வதாகும். இந்நிலையில் சந்திரயான் 3 செயற்கைக்கோள் இடம் இருந்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது .
உங்களுக்கு இலவசமா கேஸ் சிலிண்டர் வேண்டுமா..? அப்போ போன் பேயின் இந்த சலுகையை பத்தி தெரிஞ்சுக்கோங்க…!!
அதாவது, “சந்திரயான் 3 நிலவின் மேற்பரப்பின் அடியில் உறைந்த நிலையில் பனி இருப்பதை உறுதி செய்திருக்கிறது. மேலும், சந்திர சூழலில் வியக்கத்தக்க வகையில் அதிக எலக்ட்ரான் அடர்த்தி இருப்பதையும் சந்திரயான் 3 கண்டறிந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேம்பட்ட இமேஜிங் கருவிகளைப் பயன்படுத்தி கண்டறிந்தாகவும் இதை தொடர்ந்து, நிலவின் பிற பகுதிகள் மற்றும் பாறை அமைப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது”.


























