மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது மாற்றம் -அமைச்சர் விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வுக்கான வயதை மாற்றும் திட்டம் எதுவுமில்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் இன்று மக்களவையில் பதிலளித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது:
தற்போது மக்களவை கூட்டம் நடந்து வருகிறது. மக்களவை கூட்டத்தில் பல்வேறு துறைகளையும் சார்ந்த அமைச்சர்கள் தங்கள் தங்கள் துறை சார்ந்த அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகின்றனர். விவாதத்தின் போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மாற்றம் குறித்து கேள்வி மக்களவையில் எழுப்பப்பட்டது.
இந்தியாவில் 7,25,900 மொபைல் போன்கள் முடக்கம் – சஞ்சார் சாத்தி செயலி” மூலம் நடவடிக்கை.. அரசு தகவல்!
இதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் 122 அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு சேவை விதிகளின் கீழ் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 60 வயதிற்கு பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், டிஜிட்டலைசேஷன், மின் அலுவலகத்தின் மேம்பட்ட பயன்பாடு, விதிமுறைகளை எளிமைப்படுத்துதல், மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல் போன்ற பணிகளை மேம்படுத்துவதற்கான தேவையற்ற சட்டங்களை நீக்குவதற்கு அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.